வள்ளலாரை  போற்றுவோம்!

இராமலிங்க வள்ளலாரைபோற்றி வாழ்த்துக் கூறுவோம்! - அவர்கூறும் நல்ல வழியில் சென்று 
வள்ளலாரை  போற்றுவோம்!


இராமலிங்க வள்ளலாரை
போற்றி வாழ்த்துக் கூறுவோம்! - அவர்
கூறும் நல்ல வழியில் சென்று 
குறைகள் இன்றி வாழுவோம்!

உயிர்கள் போற்றும் உலகம் தன்னை 
உணர்வில் நிறுத்தல் வேண்டுமே! - அவர்
உரைத்த சொல்லின் நன்மை தன்னை 
உணர வேண்டும் நிச்சயம்!

வாடும் பயிரைக் கண்டபோது 
வாடி நின்றார் கருணையில்!
வாழும் முறைகள் வகுத்துப் பாடி 
வழிகள் நமக்குக் காட்டினார்!

கடை விரித்தேன் என்று சொல்லி 
கருத்தை விரித்த சேதியை - நாம் 
விடைகள் தெரிந்து விரைந்து நன்மை 
விளையும் செயலில் சேருவோம்!

அருளில் பெருகும் சோதி என்று 
அமைத்த வள்ளல் அடிகளை 
தொழுது பெருகி ஓங்கும் கருணை 
கொண்டு உயிர்கள் போற்றுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com