பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வள்ளலாரை  போற்றுவோம்!

இராமலிங்க வள்ளலாரைபோற்றி வாழ்த்துக் கூறுவோம்! - அவர்கூறும் நல்ல வழியில் சென்று 

Published On :


இராமலிங்க வள்ளலாரை
போற்றி வாழ்த்துக் கூறுவோம்! - அவர்
கூறும் நல்ல வழியில் சென்று 
குறைகள் இன்றி வாழுவோம்!

உயிர்கள் போற்றும் உலகம் தன்னை 
உணர்வில் நிறுத்தல் வேண்டுமே! - அவர்
உரைத்த சொல்லின் நன்மை தன்னை 
உணர வேண்டும் நிச்சயம்!

வாடும் பயிரைக் கண்டபோது 
வாடி நின்றார் கருணையில்!
வாழும் முறைகள் வகுத்துப் பாடி 
வழிகள் நமக்குக் காட்டினார்!

கடை விரித்தேன் என்று சொல்லி 
கருத்தை விரித்த சேதியை - நாம் 
விடைகள் தெரிந்து விரைந்து நன்மை 
விளையும் செயலில் சேருவோம்!

அருளில் பெருகும் சோதி என்று 
அமைத்த வள்ளல் அடிகளை 
தொழுது பெருகி ஓங்கும் கருணை 
கொண்டு உயிர்கள் போற்றுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.