/

வள்ளலாரை  போற்றுவோம்!

இராமலிங்க வள்ளலாரைபோற்றி வாழ்த்துக் கூறுவோம்! - அவர்கூறும் நல்ல வழியில் சென்று 

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:27 am IST


இராமலிங்க வள்ளலாரை
போற்றி வாழ்த்துக் கூறுவோம்! - அவர்
கூறும் நல்ல வழியில் சென்று 
குறைகள் இன்றி வாழுவோம்!

உயிர்கள் போற்றும் உலகம் தன்னை 
உணர்வில் நிறுத்தல் வேண்டுமே! - அவர்
உரைத்த சொல்லின் நன்மை தன்னை 
உணர வேண்டும் நிச்சயம்!

வாடும் பயிரைக் கண்டபோது 
வாடி நின்றார் கருணையில்!
வாழும் முறைகள் வகுத்துப் பாடி 
வழிகள் நமக்குக் காட்டினார்!

கடை விரித்தேன் என்று சொல்லி 
கருத்தை விரித்த சேதியை - நாம் 
விடைகள் தெரிந்து விரைந்து நன்மை 
விளையும் செயலில் சேருவோம்!

அருளில் பெருகும் சோதி என்று 
அமைத்த வள்ளல் அடிகளை 
தொழுது பெருகி ஓங்கும் கருணை 
கொண்டு உயிர்கள் போற்றுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.