மாலை வேளை. குளிர ஆரம்பித்திருந்தது. தெய்வக்குழந்தை கண்ணன் தெருவில் புழுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். உடலெல்லாம் புழுதி. அதை ஒரு கோபிகாஸ்த்ரீ பார்த்து விட்டாள். அவள் குழந்தையைக் குளிப்பாட்ட நினைத்தாள். அருகில் ஒரு சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. அதிலிருந்து குழந்தையைக் குளிப்பாட்ட குளிர்ந்த நீரை எடுத்து வந்தாள். தண்ணீர் சில்லென்று இருந்தது.
சற்று வெதுவெதுப்பாக இருக்கும் என நினைத்து ஒரு சிறு தவலையில் தண்ணீரை நிரப்பி அடுப்பில் சூடு பண்ணிக்கொண்டிருந்தாள். வெகுநேரம் ஆகியது. தண்ணீர் சுட்டபாடில்லை! ஆனால் அடுப்பு எரிந்துகொண்டிருந்தது! அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
""தண்ணீரைக் கீழே கொட்டிடுங்க!'' என்றது தெய்வக் குழந்தை!
அந்த மாயச் சொற்களைக் கேட்டு புன்னகையுடன் தண்ணீரைக் கீழே கொட்டினாள் கோபிகை. கொட்டிய நீரிலிருந்து ஒரு தவளை குதித்துக்கொண்டு ஓடியது.
நல்ல காலம் தண்ணீரி சூடாகவில்லை!.... இந்தச் சிறிய உயிர் காப்பாற்றப்பட்டது!.... தண்ணீர் சூடாகாமல் போனதற்கு தெய்வக்குழந்தையின் கருணையே காரணம் என உணர்ந்தாள் அந்த கோபிகை!
பிறகு வெந்நீர் வைத்து குளிப்பாட்டி அலங்கரித்து கண்ணனை மேலும் அழகாக்கினாள் அவள்!
(காது வழிக் கதை)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மஞ்சணத்தி இளையராஜாவுக்காகவே எழுதப்பட்டது: மாரி செல்வராஜ்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக பணிபுரிந்த 30 இந்திய ஓட்டுநர்கள் கைது!
ரத்ன குமாரின் 29 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

திரையில் தோன்றி பாடல்களுக்கு உயிரூட்டிய இளையராஜா!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



