தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

"ர' கரமும்,  "ற' கரமும் அறிவாய்!

"ர' கரம், "ற' கரம் மாறி, மாறி வருமே உரையில்... பாட்டில்!

Published On :


"ர' கரம், "ற' கரம் மாறி, மாறி 
வருமே உரையில்... பாட்டில்!
தெரிந்து, புரிந்து பேசிப் பழகு
சிரமம் இல்லை தம்பி!

அறிவை வளர்க்கும் அரிய கல்வி
அருளும் பள்ளி அருகில்
சிறிய, பெரிய உருவில் மரங்கள் 
சிறந்த முறையில் வளரும்.

கரையும் காகம், குருவி போன்ற 
பறவை இரையைப் பெறுமே!
மருந்தும், விருந்தும் வழங்கும் மரத்தை 
மறந்தும் வெட்ட வேண்டாம். 

பரிதி ஒளியை வாங்கித் தரையில் 
பகலில் வரையும் நிழலை
எரியும் வெயிலில் தெருவில் திரியும் 
எவரும் பெறுவர் குளுமை!

உரமும், திறமும், தரமும் வாய்ந்த 
மரங்கள் இயற்கை வரங்கள்!
இரங்கும் மழையை கிறங்க வைக்கும் 
மரங்கள் காந்தக் கரங்கள்!

விறகுக்காக வெட்டினாலும் 
பிறகும் பொறுமை காக்கும்!
அருமை, பெருமை அறிவதோடு 
நிறைய மரங்கள் வைப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.