சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எதிரொலி!

ஆராவமுதன் என்ற சிறுவன் ஆடுகள் மேய்ப்பவன். ஆடுகளை ஓட்டிக்கொண்டு மலைமுகட்டுக்குச் சென்றான். அப்போது மந்தையிலிருந்த ஒரு ஆடு பாறை இடுக்கில் போய் ஒளிந்து கொண்டது.

News image
Updated On :26 ஜூன் 2021, 12:30 am

எஸ்.திருமலை

ஆராவமுதன் என்ற சிறுவன் ஆடுகள் மேய்ப்பவன். ஆடுகளை ஓட்டிக்கொண்டு மலைமுகட்டுக்குச் சென்றான். அப்போது மந்தையிலிருந்த ஒரு ஆடு பாறை இடுக்கில் போய் ஒளிந்து கொண்டது.
""ஆடே எங்கே போனே?'' என்று கத்தினான் ஆராவமுதன்.
""ஆடே எங்கே போனே?'' என்று அவன் குரல் மலை முகட்டில் பட்டு எதிரொலித்தது. பயந்து விட்டான். தன் குரலை யாரோ கேலி செய்கிறார்கள் என்று நினைத்தான். ஆராவமுதனுக்குக் கோபம் வந்தது.
அவன் மறுபடி, ""யாரடா என்னைக் கேலி செய்பவன்?'' என்று கத்தினான். ஒலியின் வேகமும் அதிகரித்தது.
""யாரடா என்னைக் கேலி செய்பவன்? .....யாரடா என்னைக் கேலி செய்பவன்?.... யாரடா என்னைக் கேலி செய்பவன்?... '' என்று மறுபடியும், மறுபடியும் கேட்டது. நிறைய பேர் தன்னை திட்டுவதாக அவனுக்குத் தோன்றியது. பயமாகவும் இருந்தது. அவன் ஆடுகளை ஒருவழியாக ஓட்டிக்கொண்டு கோபமாக வீட்டுக்குச் சென்றான்.
அம்மாவிடம், ""அம்மா எனக்கு மலை முகட்டிலே நிறைய எதிரிகள் இருக்காங்க.... பயமாவும், கோபமாவும் இருக்கு!'' என்றான். அவனுக்கு அழுகை வந்தது.
விவரம் என்ன என்பதைப் புரிந்துகொண்டாள் அம்மா. ஆராவமுதனிடம், ""நாளைக்கு நீ மலை முகட்டுக்குப்போய் நட்பாகப் பேசு!... அவர்கள் நண்பர்களாவார்கள்!'' என்றாள் அம்மா.
மறுநாள் மீண்டும் ஆடுகளோடு மலைமுகட்டுக்குச் சென்று, ""நண்பா நீ நலமா?'.... சாப்பிட்டாயா?'' என்று கேட்டான்.
எதிரொலியும் அப்படியே கேட்டது. சந்தோஷமாய் வீட்டுக்கு வந்தான் ஆராவமுதன். பிறகு அம்மா அவனுக்கு எதிரொலி பற்றி விளக்கினாள். நம்மிடமிருந்து வெளிப்படும் இனிய சொற்களே நமக்குத் திரும்ப வரும் என்றும் கூறினாள். ஆராவமுதனும் அம்மாவைக் கட்டிக்கொண்டான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.