கிளியின சிறிய சிறகென
கிளையில் இலைகள் பசுமைதான்
தழுவும் காற்றில் சிலிர்க்குது!
சதங்கை இசையை ஒலிக்குது!
வேம்பின் இலையோ கசப்புதான்
விஷத்தை முறிக்கும் மருந்துதான்
நாம் விருந்து உண்ணவே
வாழை இலைகள் அருமைதான்!
துளசி இலையைத் தின்னலாம்
தொலைந்து போகும் நோய் பல!
குலுங்கும் மாவின் இலைகளால்
தோரணங்கள் கட்டலாம்!
பச்சை வண்ண வெற்றிலை
பாக்கு வெண்சுண்ணாபுடன்
இச்சையோடு சுவைக்கையில்
எந்த வாயும் சிவக்குமே!
கரு வேப்பிலைத் தாளிப்பில்
கமகமக்கும் குழம்பிலே!
அரைத்துப் பூசும் கைகளில்
அழகு சேர்க்கும் மருதாணி
தட்டுப் போன்ற வடிவுள்ள
தாமரையின் இலையிலே
சொட்டு நீரும் தங்கிடா
தழுவி நழுவிக் கொஞ்சுமே!
உதிரும் இலைகள் மரத்திலே
புதியதாகத் துளிர்த்தல்போல்
எதுவும் மாறும் என்பதை
இயற்கை நமக்குக் கூறுது!