அண்ணல் காந்தி உழைப்பினால்
அடிமை வாழ்வு அகன்றது!
எண்ணம்போல் செயல்பட
இனிய சுதந்திரம் கிடைத்தது!
தூய்மை, எளிமை, நேர்மையாய்
தியாகம் செய்தோர் துணை வர
வாங்கித் தந்தார் விடுதலை!
வாய்மை இங்கே வென்றது!
ஏற்றத் தாழ்வு மறையவும்
ஏழைகள் வாழ்வு மலரவும்
தீய மதுவை விலக்கவும்
தொண்டு செய்தார் தூயவர்!
சமத்துவத்தைக் கருணையை
சத்தியத்தைப் பேணினார்!
பலரும் அன்பாய் கூடிடும்
பண்பை இங்கே விதைத்தவர்!
அமரர் காந்தி பிறந்த நாள்
அனைவருக்கும் இனிய நாள்!
உலகம் போற்றும் உத்தமர்!
நமது தேசத் தந்தையாம்!