மக்கட்பேறு 

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
மக்கட்பேறு 

அறத்துப்பால்   -   அதிகாரம்  7  -   பாடல்  8


தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.

- திருக்குறள்


தம்மை விடவும் தம் மக்கள் 
அறிவு கொண்டு விளங்கினால் 
மாநிலத்து மனிதர்கள் 
இனிமையாக வாழ்வாரே

அறிவுடைய பெற்றோர்கள் 
அத்து மீறிப் போகாமல் 
நெறியில் நின்று பிள்ளைகளை 
முறையாய் வளர்த்து மகிழ்வாரே.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com