அறத்துப்பால் - அதிகாரம் 7 - பாடல் 8
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
- திருக்குறள்
தம்மை விடவும் தம் மக்கள்
அறிவு கொண்டு விளங்கினால்
மாநிலத்து மனிதர்கள்
இனிமையாக வாழ்வாரே
அறிவுடைய பெற்றோர்கள்
அத்து மீறிப் போகாமல்
நெறியில் நின்று பிள்ளைகளை
முறையாய் வளர்த்து மகிழ்வாரே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்