தீர்க்கதரிசி!

அச்சம் தவிர்க்கச் சொல்லியே - புதிய ஆத்தி சூடி தந்தவர்!பழக்க வழக்கம் கற்றிட - நல்ல 


அச்சம் தவிர்க்கச் சொல்லியே - புதிய 
ஆத்தி சூடி தந்தவர்!
பழக்க வழக்கம் கற்றிட - நல்ல 
பாப்பா பாட்டு சொன்னவர்!

பெண்கள் கல்வி பெறுவதை - நாட்டின் 
பெருமை என்றே உணர்ந்தவர்!
அஞ்சிக் கிடந்த மக்களை - வீரர் 
ஆக்கி வெற்றி கண்டவர்!

ஏட்டில் எழுதிப் பகைவரை - இங்கே 
எதிர்த்துப் புரட்சி செய்தவர்!
அடையும் முன்னே சுதந்திரம் - நாம் 
அடைந்ததாகச் சொன்னவர்!

கொஞ்ச காலம் வாழ்ந்தவர் - நம் 
நெஞ்சமெல்லாம் நிறைந்தவர்!
தே சியக் கவித்தேர்ச் சாரதி - ஒரு 
தீர்க்க தரிசி பாரதி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com