

மனிதரைப் பற்றிய பயமே இல்லாமல் சிறுத்தைகள் மட்டும் ஊர் எல்லைக்குள் நுழைந்து மனிதரைத் தாக்கி விடுகிறதே, ஏன்?
சிறுத்தைகள் மிகவும் வீரமானவை. எந்தச் சூழலையும் பயமே இல்லாமல் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் இயற்கை இவற்றுக்குக் கொடுத்த வரப்பிரசாதம். சிங்கம், புலியைப்போல அடர்ந்த காடுகளில் இவை வசிப்பதுமில்லை, மறைந்திருந்து, நேரம் பார்த்து தாக்கி வேட்டையாடுவதுமில்லை.
திறந்த வெளிகள், மலைப்பாங்கான இடங்கள், மனிதக் குடியிருப்பை ஒட்டியிருக்கும் தரிசு நிலங்கள் ஆகிய பகுதிகளில் சிறுத்தைகள் தைரியமாக உலா வரக்கூடியவை. இரை வேட்டையாடுவதில் சிறுத்தைகளுக்குப் போட்டியே கிடையாது. எங்கும் எப்போதும் யாரையும் தைரியமாக நேருக்கு நேர் மோதக்கூடியவை.
திறந்த வெளியில் உலா வரும் சமயத்தில் தற்செயலாகத்தான் வீடுகள் நிறைந்த பகுதிகளுக்குள் வந்துவிடுகின்றன. மற்ற விலங்குகளைப் பற்றி சிறுத்தைக்குப் பயமில்லை என்றாலும் மனிதன் மீது மட்டும் சற்றே பயமும் சந்தேகமும் இவற்றுக்கு உண்டு. அதனால் எப்போதும் மனிதர்களைத் தவிர்த்துவிடுவது இவற்றின் வழக்கம்.
இவற்றின் நடமாட்டத்துக்குக் காரணம் பசிதான். மனிதனின் உடைமைகளான மாடு, ஆடு, பன்றி, குதிரை ஆகியவற்றை எளிதில் தாக்கி வேட்டையாடும். இதனால் சிறுத்தையைத் தாக்க வரும் மனிதனையும் தாக்குவதற்கு இவை தயாராகிவிடுகின்றன. அவ்வளவுதான்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.