அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அங்கிள் ஆண்டெனா

உலகின் மிகப் பெரிய விலங்கினமான யானைக்கு இருக்கும் வித்தியாசமான உறுப்புகள் அதன் தும்பிக்கை, தந்தம், காதுகள்தான். சரி, இந்தக் காதுகள் ஏன் இவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்? 

News image
Updated On :23 ஏப்ரல் 2022, 12:19 pm

ரொசிட்டா

யானைகளுக்கு மட்டும் ஏன் அவ்ளோ பெரிய காதுகள்?

உலகின் மிகப் பெரிய விலங்கினமான யானைக்கு இருக்கும் வித்தியாசமான உறுப்புகள் அதன் தும்பிக்கை, தந்தம், காதுகள்தான். சரி, இந்தக் காதுகள் ஏன் இவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்? 

சில யானைகளின் காதுகள் 22 அடி நீளம் வரை இருக்கும். இவை அதன் கேட்கும் திறனை அதிகரிப்பதில்லை. எல்லோருக்கும் கேட்பது போலத்தான் அதற்கும் கேட்கும். இந்தக் காதுகளின் சிறப்பம்சம்:  யானையின் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதற்குத்தான் இவ்ளோ பெரிய காதுகள்!

சாதாரணமாக யானைகள் ஆசியா, ஆப்ரிக்கா போன்ற மிகவும் வெப்பமான பிரதேசங்களில் வாழ்கின்றன. யானை இருக்கும் சைசுக்கு (அளவுக்கு) எப்போதும் குளிர் காற்று வீசினால்தான் அதன் உடம்பைக் குளிர்ச்சியாக, வெப்பத்தினால் ஏதும் பாதிப்பு ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள முடியும். வெப்பப் பிரதேசங்களில் இந்தச் சலுகை யானைக்குக் கிடைப்பதில்லை. மேலும் நீருக்குள் இறங்கி தண்ணீரை வாரி இறைத்து உடம்பைக் குளிரச் செய்து கொள்ளவும் வெப்பமான இடங்களில் நீர் அவ்வளவாகக் கிடைப்பதில்லை.

ஒரே வழி, பெரிய விசிறிதான். அந்த விசிறியாகப் பயன்படுகிறது யானையின் காதுகள். அதனால்தான் யானை எப்போதும்  தனது காதுகளை இப்படியும் அப்படியுமாக அசைத்துக்கொண்டே இருக்கிறது. இதனால் தனது உடம்பின் வெப்ப நிலையைச் சமன்படுத்திக் கொள்கிறது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.