1. மளிகைக் கடையில் வாசம் செய்யும் ராணி...
2. நீ நீட்டினால், இது உன் கையில் மாட்டப்படும்...
3. நெருப்பில் சுடப்பட்டவனுக்கு நீண்ட ஆயுள்...
4. தூர இருந்து பார்த்தால் ஐந்து கால்கள்... கிட்ட வந்து பார்த்தால் நான்கு கால்கள்தான்...
5. பட்டணத்து ஆலமரம் வெட்ட வெட்ட துளிர்க்கிறது...
6. காம்போ, இலையோ இல்லாத காய்...
7. தலையில் மோதி மோதி பல்லை இழந்தவன்...
8. விண்ணிலே சிரிப்பவள், கண்ணையும் பறிப்பவள்...
விடைகள்
1. சாம்பிராணி
2. வளையல்
3. செங்கல்
4. யானை
5. தலைமுடி
6.பொரிவிளங்காய்
7. சீப்பு
8. மின்னல்