ஒன்றாய் உண்ணும் பொங்கல்!

ஒன்றாய் உழைக்கும் மாட்டுக்கு    ஒருநாள் விருந்து வைத்திடுவோம்நன்றாய் நம்மோ டுழைத்திடுதே
ஒன்றாய் உண்ணும் பொங்கல்!
Published on
Updated on
1 min read

ஒன்றாய் உழைக்கும் மாட்டுக்கு
    ஒருநாள் விருந்து வைத்திடுவோம்
நன்றாய் நம்மோ டுழைத்திடுதே
    நாளும் பாடு பட்டிடுதே
பெற்ற குழந்தை உதவுதல்போல
    பிரியங் காட்டி நமைத்தாங்கும்
கற்றோர் காட்டும் பாசாங்கு
    காட்டு வதில்லை எள்ளளவும்
அன்பில் சேர்ந்த ஒருபிள்ளை
    ஆதர வான நற்பிள்ளை
என்பும் உருக உழைப்பதிலே
    எங்கள் மாடே முதற்பிள்ளை
எங்கள் வீட்டுப் பிள்ளையென
    இசைந்தே வாழும் இயல்பினிலே
தங்கும் இடத்தில் தண்மையுடன்
    தானாய் இருக்கும் அமைதியிலே
உழைக்கும் உயிர்க்கு விருந்திடவே
    ஓர்ந்தார் நன்றி தமிழர்களே
அழைப்போம் மாட்டை அழகுடனே
    அருமை விருந்தைப் படைப்பதற்கே
நன்றிக் கதிரோன் பொங்கலிது
    நலிவை மாற்றும் பொங்கலிது
ஒன்றும் உறவும் அஃறிணையும்
    ஒன்றாய் உண்ணும் பொங்கலிது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com