/

ஒன்றாய் உண்ணும் பொங்கல்!

ஒன்றாய் உழைக்கும் மாட்டுக்கு    ஒருநாள் விருந்து வைத்திடுவோம்நன்றாய் நம்மோ டுழைத்திடுதே

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:33 pm IST

ஒன்றாய் உழைக்கும் மாட்டுக்கு
    ஒருநாள் விருந்து வைத்திடுவோம்
நன்றாய் நம்மோ டுழைத்திடுதே
    நாளும் பாடு பட்டிடுதே
பெற்ற குழந்தை உதவுதல்போல
    பிரியங் காட்டி நமைத்தாங்கும்
கற்றோர் காட்டும் பாசாங்கு
    காட்டு வதில்லை எள்ளளவும்
அன்பில் சேர்ந்த ஒருபிள்ளை
    ஆதர வான நற்பிள்ளை
என்பும் உருக உழைப்பதிலே
    எங்கள் மாடே முதற்பிள்ளை
எங்கள் வீட்டுப் பிள்ளையென
    இசைந்தே வாழும் இயல்பினிலே
தங்கும் இடத்தில் தண்மையுடன்
    தானாய் இருக்கும் அமைதியிலே
உழைக்கும் உயிர்க்கு விருந்திடவே
    ஓர்ந்தார் நன்றி தமிழர்களே
அழைப்போம் மாட்டை அழகுடனே
    அருமை விருந்தைப் படைப்பதற்கே
நன்றிக் கதிரோன் பொங்கலிது
    நலிவை மாற்றும் பொங்கலிது
ஒன்றும் உறவும் அஃறிணையும்
    ஒன்றாய் உண்ணும் பொங்கலிது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.