அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அங்கிள் ஆன்டெனா

மேகம் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் வெண்மையாக இருக்கிறது என்று சொன்னீர்கள். அப்படியானால் மழை வருவதற்கு முந்தைய மேகம் மட்டும் ஏன் கருமை நிறத்தில் இருக்கின்றது?

News image
Updated On :12 ஜூன் 2022, 12:30 am

ரொசிட்டா

மேகம் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் வெண்மையாக இருக்கிறது என்று சொன்னீர்கள். அப்படியானால் மழை வருவதற்கு முந்தைய மேகம் மட்டும் ஏன் கருமை நிறத்தில் இருக்கின்றது?

மேகத்தில் உள்ள குட்டிகுட்டியான நீர்த்திவலைகள் சூரியனின் வெளிச்சக் கதிர்களைப் பிரதிபலிப்பதால் மேகம் வெண்மையாக இருக்கின்றது என்று சென்ற வாரம் படித்தோம். அப்படியானால் மழை மேகம் மட்டும் ஏன் கருப்பாக இருக்க வேண்டும்? முதலில் மழை மேகம் எப்படி உருவாகிறது என்று கவனியுங்கள். 

பூமியிலுள்ள நீர்த்துளிகள் ஆவியாகி மேலே சென்று மேகங்களாகின்றன. இந்த நீர்த்துளிகள்தான் வெண்ணிற சூரியக் கதிர்களை பிரதிபலித்து மேகத்துக்கு வெண்மை நிறம் தருகின்றன. இதே நீர்த்துளி ஆவி அதிகமாகச் சேர்ந்துகொண்டே போவதால் மேகத்தில் அடுக்கடுக்காக நீர்த்திவலைகள் சேர்ந்துகொண்டே போகின்றன. இப்படி சேரச் சேர அந்த மேகம் மிக உயரத்துக்குச் சென்றுவிடுகிறது. இந்த இரண்டு காரணங்களினால் மேக நீர்த்திவலைகள் சூரிய ஒளியைப் பிரதிபலித்தாலும் அந்த அடுக்குகளைத் தாண்டி அந்த ஒளி நம்மை அடைவது கடினமாகிவிடுகிறது.

மேலும், இந்தக் கார்மேகங்கள் மிக உயரத்திற்கும் சென்று விடுவதால் நமக்கு இந்த மழை மேகம் கருமையாகத்தான் தோன்றும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.