சிறுவர்மணி
விடுகதைகள்
1. காலையிலே கூவும் பட்சி, கந்தன் கொடியிலே காணும் பட்சி...
2. சிறிய கோட்டையைச் சுற்றி மதில் சுவர். உள்ளே
ஒளிந்திருக்கிறான் வேட்டைக்காரன்.
3. ஆங்காங்கே முடிச்சுகள், ஆனாலும் சுவைதான்...
4. கோயிலைச் சுற்றி கருப்பு, கோயிலுக்கு உள்ளே வெளுப்பு...
5. காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர்...
6. நடை என்னவோ அழகுதான், ஆனாலும் குறுக்கே
வந்தால் பலருக்கும் பிடிக்காது...
7. கொட்டிக் கிடக்குது புள்ளிகள், கோலம் போடத்தான் ஆளில்லை...
8. வெயிலில் மலரும் பூ, காற்றில் உலரும் பூ...
விடை:
1. சேவல்
2. நாக்கு
3.கரும்பு
4. சோற்றுப்பானை
5. தவளை
6. பூனை
7. நட்சத்திரக்கூட்டம்
8. வியர்வை