ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

யானையும் புலிகளும்...

அந்த அடர்ந்த வனத்தில் ஓரிடத்தில் குளம்போல் தண்ணீர் நிறைந்து இருந்தது. பாதையில் கிளைகளை ஓடித்து தழைகளை நின்றுகொண்டே வந்த யானை தண்ணீர் குடிக்கலாம் என்று குளத்தருகே சென்றது.

News image
Updated On :23 அக்டோபர் 2022, 6:00 am IST


அந்த அடர்ந்த வனத்தில் ஓரிடத்தில் குளம்போல் தண்ணீர் நிறைந்து இருந்தது. பாதையில் கிளைகளை ஓடித்து தழைகளை நின்றுகொண்டே வந்த யானை தண்ணீர் குடிக்கலாம் என்று குளத்தருகே சென்றது.

எதிர்பக்கத்திலிருந்து இரு புலிகள் வந்து கொண்டிருந்தன. அவை யானையைப் பார்த்ததும் அதற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.  இரண்டும் சேர்ந்து யானையைக் கொன்றால், பல நாள் பசியைப் போக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தன.

புலிகளைக் கண்ட யானை தண்ணீருக்குள் இறங்கியது. புலிகள் பின்னாலேயே சென்றன.

யானை முதுகு மூழ்கும் அளவுக்கு தண்ணீரில் சென்று இருந்த புலிகளும் வரட்டும் என்று கரையில் காத்திருந்தன. சிறிது நேரம் புதரில் ஒதுங்கியிருந்தன.

யானையும் கரைக்கு வந்தது. புலிகள் இரண்டும் அதைக் கடிக்க பாய்ந்தன. யானை சுற்றிச் சுற்றி வந்து தும்பிக்கையில் புலிகளை அடித்து விரட்டியது. இருப்பினும், புலிகள் விடவில்லை.

யானையை எந்த விலங்கும் முன்பக்கம் தாக்க இயலாது எனவே, இரண்டு புலிகளும் யானையின் பின்பக்கமாகச் சென்று, யானையின் முதுகில் ஏறிவிட்டன.

யானை சுற்றிச் சுற்றி வந்தும் ஏதுவும் செய்ய இயலவில்லை. ஒரு புலி, யானையின் தலையைக் கடிக்க,  மற்றொன்று முதுகை தாக்கத் தொடங்கின. யானையால் ஒன்றும் செய்ய இயலவில்லை. 

சுற்றும் முற்றும் பார்த்த யானை ஒரு பெரிய மரத்தின் ஒரு கிளையானது, யானையின் முதுகுக்கு மேல் ஒரு அடி உயரத்தில் வளைந்திருந்தது.  உடனே யானை மரத்தருகே ஓடியது. அப்போது, மரக்கிளை பட்டு இரு புலிகளும் கீழே விழுந்து, அடிபட்டன.  பலத்த காயமுற்ற புலிகள் இரண்டும் தட்டுத் தடுமாறி எழுந்து நடந்தன. ஆனால், யானை கம்பீரமாக நடந்து சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.