மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

யானையும் புலிகளும்...

அந்த அடர்ந்த வனத்தில் ஓரிடத்தில் குளம்போல் தண்ணீர் நிறைந்து இருந்தது. பாதையில் கிளைகளை ஓடித்து தழைகளை நின்றுகொண்டே வந்த யானை தண்ணீர் குடிக்கலாம் என்று குளத்தருகே சென்றது.

News image
Updated On :23 அக்டோபர் 2022, 12:30 am

கொ.மா.கோதண்டம்


அந்த அடர்ந்த வனத்தில் ஓரிடத்தில் குளம்போல் தண்ணீர் நிறைந்து இருந்தது. பாதையில் கிளைகளை ஓடித்து தழைகளை நின்றுகொண்டே வந்த யானை தண்ணீர் குடிக்கலாம் என்று குளத்தருகே சென்றது.

எதிர்பக்கத்திலிருந்து இரு புலிகள் வந்து கொண்டிருந்தன. அவை யானையைப் பார்த்ததும் அதற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.  இரண்டும் சேர்ந்து யானையைக் கொன்றால், பல நாள் பசியைப் போக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தன.

புலிகளைக் கண்ட யானை தண்ணீருக்குள் இறங்கியது. புலிகள் பின்னாலேயே சென்றன.

யானை முதுகு மூழ்கும் அளவுக்கு தண்ணீரில் சென்று இருந்த புலிகளும் வரட்டும் என்று கரையில் காத்திருந்தன. சிறிது நேரம் புதரில் ஒதுங்கியிருந்தன.

யானையும் கரைக்கு வந்தது. புலிகள் இரண்டும் அதைக் கடிக்க பாய்ந்தன. யானை சுற்றிச் சுற்றி வந்து தும்பிக்கையில் புலிகளை அடித்து விரட்டியது. இருப்பினும், புலிகள் விடவில்லை.

யானையை எந்த விலங்கும் முன்பக்கம் தாக்க இயலாது எனவே, இரண்டு புலிகளும் யானையின் பின்பக்கமாகச் சென்று, யானையின் முதுகில் ஏறிவிட்டன.

யானை சுற்றிச் சுற்றி வந்தும் ஏதுவும் செய்ய இயலவில்லை. ஒரு புலி, யானையின் தலையைக் கடிக்க,  மற்றொன்று முதுகை தாக்கத் தொடங்கின. யானையால் ஒன்றும் செய்ய இயலவில்லை. 

சுற்றும் முற்றும் பார்த்த யானை ஒரு பெரிய மரத்தின் ஒரு கிளையானது, யானையின் முதுகுக்கு மேல் ஒரு அடி உயரத்தில் வளைந்திருந்தது.  உடனே யானை மரத்தருகே ஓடியது. அப்போது, மரக்கிளை பட்டு இரு புலிகளும் கீழே விழுந்து, அடிபட்டன.  பலத்த காயமுற்ற புலிகள் இரண்டும் தட்டுத் தடுமாறி எழுந்து நடந்தன. ஆனால், யானை கம்பீரமாக நடந்து சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.