பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தெரியுமா?

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் எழுதிய "ஹாரிபார்ட்டர் அன் தி ஃபிலாஸபர்ஸ் ஸ்டோன்' கதை முதல் பதிப்பில் 500 பிரதிகள்தான் 1997இல் அச்சிடப்பட்டன.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 6:30 pm

பொன்மலை சம்பத்குமாரி

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் எழுதிய "ஹாரிபார்ட்டர் அன் தி ஃபிலாஸபர்ஸ் ஸ்டோன்' கதை முதல் பதிப்பில் 500 பிரதிகள்தான் 1997இல் அச்சிடப்பட்டன. அந்த 500 பிரதிகளில் ஒன்று ரூ.11 லட்சத்துக்கு (இந்திய மதிப்பில்) ஏலம் போனது.  இதை வாங்கியவர் மறதியாக எங்கோ வைத்துவிட்டு செல்ல, அது அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. அப்போது ஒரு நூலின் விலை ரூ.32.

சான்ஃபிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் ஒரு பூனை அண்மையில் பணி அமர்த்தப்பட்டது. விமானத்தைப் பிடிக்க வரும் பயணிகள் டென்ஷனில் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்தப் பூனை பழகும்போது,  அவர்கள் சகஜ நிலைக்குத் திரும்புகிறார்கள்.  முதன்முதலில் கலிஃபோர்னியா விமான நிலையத்தில்தான் 2013ஆம் ஆண்டில் ஒரு நாய் பணிக்கு அமர்த்தப்பட்டது. பின்னர், ஒவ்வொரு செல்லப் பிராணிகளாகப் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றன.

தூக்கக் கலக்கமாகவும் உற்சாகமின்மையாகவும் இருக்கும்போது, புத்துணர்வைப் பெற நாம் குடிப்பது காபியை.  ஆனால், காபியைவிட ஆப்பிள் புத்துணர்வை அளிப்பதாக அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.  காபியில் இல்லாத கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, தாதுக்கள் ஆப்பிளில் இருப்பதுதான் புத்துணர்வுக்குக் காரணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.