அங்கிள் ஆன்டெனா: மேகம் ஏன் எப்போதும் வெண்மை நிறத்தில் இருக்கிறது?

வானில் தெரியும் மேகம் ஏன் எப்போதும் வெண்மை நிறத்தில் இருக்கிறது?
அங்கிள் ஆன்டெனா: மேகம் ஏன் எப்போதும் வெண்மை நிறத்தில் இருக்கிறது?
Updated on
1 min read


கேள்வி: வானில் தெரியும் மேகம் ஏன் எப்போதும் வெண்மை நிறத்தில் இருக்கிறது?

பதில்: மேகங்கள் காற்றினாலும் நீரினாலும் ஆனவை. மேகத்தில் குட்டிகுட்டியான நீர்த் திவலைகள் கோடிக்கணக்கில் இருக்கும். சூரியனின் வெளிச்சக் கதிர்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. அதாவது ஒளி எப்போதுமே பளிச்சென்று வெண்மையாக இருக்கிறது. இந்த வெளிச்சக் கதிர்கள் மேகத்திலுள்ள நீர்த் திவலைகளில் பட்டவுடன் அந்த நீர்த் திவலைகள் சூரிய ஒளியைப் பிரதிபலிக்க ஆரம்பித்துவிடுகின்றன.  அவ்வளவு நீர்த்திவலைககளும் வெளிச்சத்தை  ஒன்றாகச் சேர்ந்து பிரதிபலிக்கும்போது,  அந்த மேகம் நமக்குப் பார்ப்பதற்கு வெண்மை நிறமாகத் தோன்றுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com