மழை பெய்யும்போது, வானில் மின்னல் தோன்றும். இந்த மின்னல் வரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
ஒரு மின்னல் கீற்றின் வெப்பமானது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாகும்.
மின்னிக் கொண்டிருக்கும்போது வீட்டில் இருப்பதே பாதுகாப்பானது.
வீசும் காற்றில் மின்னல் மிதந்துவரும். ஆகவே, ஜன்னல்களை மூடிவிடுவது நன்று.
மின்னல் தாக்கும்போது மாடியிலிருந்து வரும் உலோகக் குழாய், உலோகப் பொருள்களைத் தொட வேண்டாம்.
போன், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நன்று.
கட்சிக் கொடிக்கம்பங்கள், உலோக வேலிகள், மரங்கள் அருகே நிற்க வேண்டாம்.
வெளியே செல்லும்போது மின்னல் மின்னினால் ஏதாவது ஒரு வீட்டினுள் அங்கிருப்போரின் அனுமதியுடன் ஒதுங்க முயற்சி செய்யுங்கள்.