ஒன்றுகூடி விளையாடு
ஒற்றுமை உணர்வை வளர்த்துகொள்!
போட்டி மனப்பான்மையை வளர்த்துகொள்!
பொறாமை உணர்வைத் தவிர்த்துவிடு!
விட்டுக் கொடுத்து பழகிவிடு!
வீம்பான குணத்தை உதறிவிடு!
புறம் பேசுவதை மறந்துவிடு!
வாய்மையின் வழியே சென்றுவிடு!
எண்ணங்கள் தூய்மை பெறுமானால்
சொல்லும் செயலும் தூய்மையாகுமே!
ஈகை குணத்தை நீ கடைபிடித்தால்
என்றும் வாழ்வு சொர்க்கமாகுமே!