தேவையானதைத் தேட மறுத்து தேவையற்றதைத் தேடும் மனித வாழ்க்கைக்கு ஒருவர் தரும் விலை நிம்மதி.
-கே.ராமநாதன், மதுரை.
காயங்களின்றி காலம் எதையும் கற்றுக் கொடுப்பது இல்லை.
-ந.சண்முகம், திருவண்ணாமலை.
ரத்ததானம் செய்; அதை சாலையில் செய்யாதே!
-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
ஆடம்பரம் என்பது பலியான வறுமை. மனநிறைவு என்பது வற்றாத செல்வம்.
-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
வேலைக்கு மிகவும் பாதுகாப்பான மருந்து பயனுள்ள வேலையில் ஈடுபடுவதே!
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
இருப்பிடங்கள்தான் செங்கற்களால் கட்டப்பட வேண்டும். இல்லங்கள் இதயங்களால் உருவாக்கப்பட வேண்டும். தடம் பார்த்து நடப்பவன் மனிதன்; தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்.
-அ.யாழினி பர்வதம், சென்னை.
நமக்கானது எதுவும் நம்மைவிட்டு போகாது. நம்மைவிட்டு போனால் அது நமக்கானது அல்ல.
பாதை இல்லையே என்று கவலைப்படாதே! நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.
உடையாதவரைதான் எதையும் ரசிக்கலாம். உடைந்(த்)து ஓட்டிவைத்தால் சகித்துகொள்ளலாம். ரசிக்க முடியாது!
-பி.கோபி, கிருஷ்ணகிரி.
நீ முயற்சி செய்யும்போது வீண் முயற்சி என்று சொல்லும் இந்த உலகம் நீ வெற்றிபெற்றுவிட்டால் விடாமுயற்சி என்று சொல்லும்.
-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.