சேமிப்பு மூன்றுவிதமாக இருக்க வேண்டும். சோறு- இன்றைய தேவை. அரிசி- நாளைய தேவை. விதை நெல்- எதிர்காலத் தேவை.
-பத்மா சாரதி, தஞ்சாவூர்.
விதைத்த பின்பும் விழிப்போடிரு. வாழ்வு வளமாகும்.
-மா.திவாகர், மரத்துறை.
உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல், உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால் வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.
-கல்கி, சிதம்பரம்.
வாழ்க்கை விசித்திரமான புத்தகம். நேற்றைய பக்கத்தைத் திரும்பிப் பார்க்கலாம். ஆனால், நாளைய பக்கத்தைப் புரட்டிப் பார்க்க முடியாது.
-முனைவர் ச.உமாதேவி, திருவண்ணாமலை.
இளமையில் தகப்பனையும், முதுமையில் மனைவியும் ஓர் ஆண் இழக்கக் கூடாத சொத்துகள்.
மனத் திருப்தி உள்ளவன் ஏழ்மையிலும் செல்வந்தன்தான்.
-ந.சண்முகம், திருவண்ணாமலை.
பொய் சொல்வது கேவலம். பொய்யை நம்புவது அதைவிட கேவலம்.
சோம்பேறிக்கும் கூலி உண்டு. அதுதான் வசைமொழி.
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
சோம்பலோடு கூட்டணி வைக்காதே. தோல்விக் கோட்டையை ஆட்சி செய்யாதே.
அடுத்தவனை அழிக்க நினைத்தால் நீயே அழிந்துவிடுவாய்.
ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
கழட்டிவிட்டு போனாலும் காத்திருப்பது செருப்பு மட்டும்தான்.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.
போட்டிப் போடுவோரிடம் போட்டி போடலாம். பொறாமைப்படுவோரிடம் விலகிப் போகலாம்.
-அ.ரவீந்திரன், குஞ்சன்விளை.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது தவறு. மணமான பின் மாறும் என்பதே சரி.
-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.
நடக்க வேண்டிய இடத்துக்கு வண்டியில் சென்றால் உடல் நலமில்லை.
வண்டியில் செல்ல வேண்டிய இடத்துக்கு நடந்து போனால் பண நலம் இல்லை.
-பி.கோபி, கிருஷ்ணகிரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாரதி வாழ்க்கையிலே...

ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு
முன்மாதிரி முனைப்பு!

காவிரி விவகாரத்தில் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை: துரைமுருகன்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



