சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம். தமிழ்நாடு அரசு கடற்கரை ஆரம்பப் பள்ளி. ஒருபுறம் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பு. இன்னொருபுறம் கம்ப்யூட்டரில் டிடிபி பயிற்சி. அங்கிருந்து நடக்கிறோம். அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தின் முன்பு பரதநாட்டியப் பயிற்சி. அருகே உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் யோகாசனப் பயிற்சி. ஸ்லோகப் பயிற்சி. இந்தப் பயிற்சிகள் எல்லாம் நடப்பதற்குக் காரணம், சி.கிருஷ்ணமூர்த்தி. அவர் படித்ததோ வெறும் எட்டாம் வகுப்பு. வியப்பில் மூழ்கிப் போய் சிறிதுநேரம் கழித்து, அதிலிருந்து மீண்டு வந்து அவரிடம் பேசினோம்.