கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

என்.எஸ்.கே.யின் வீடு!

சென்னை ராயப்பேட்டை தாண்டவராயன் தெருவை ஒட்டிச் செல்லும் சண்முகமுதலி தெருவிலிருந்த வீட்டை, கடைசிக் காலத்தில் விற்க வேண்டிய நிலை கலைவாணர் என்.எஸ்.கே.வுக்கு ஏற்பட்டது.

News image
Updated On :12 மே 2013, 9:54 am IST

சென்னை ராயப்பேட்டை தாண்டவராயன் தெருவை ஒட்டிச் செல்லும் சண்முகமுதலி தெருவிலிருந்த வீட்டை, கடைசிக் காலத்தில் விற்க வேண்டிய நிலை கலைவாணர் என்.எஸ்.கே.வுக்கு ஏற்பட்டது.
 நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு அதை விற்கலாம் என்ற பேச்சு வந்தது. வாயளவில் ஒரு தொகையும் பேசப்பட்டது. பணம் கை மாறவில்லை. பத்திரம் எதுவும் முடியவில்லை. அதற்குள் ஒரு மார்வாடி அதிகத் தொகைக்கு அவ்வீட்டைக் கேட்டார். கலைவாணருக்கும் பணத் தேவை அதிகம்தான்.
 சில நண்பர்கள் மார்வாடிக்கு விற்கும்படி தூண்டினர். ஆனால் கலைவாணர் மறுத்துவிட்டார். ""இந்த வீடு நீண்ட நாள்களாக நான் வசிக்கும் வீடு. இதை விற்ற பிறகு எப்போதாவது இந்தப் பக்கம் வரும்போது "நம்முடைய பழைய வீடு இது. ஒரு மார்வாடிக்குப் போய்விட்டதே' என்று நினைக்க நேர்ந்தால் மனம் வருத்தப்படும்.
 அதே சமயம் சிவாஜி இந்த வீட்டில் இருந்தால் "நம்முடைய வீட்டில் இப்போது தம்பி சிவாஜி இருக்கிறார்' என்றால் அது வருத்தமாகத் தோன்றாது. மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அல்லவா? உள்ளே போகவும் மனம் கூசாது'' என்று அதிகப் பணத்திற்கு மார்வாடிக்கு விற்க மறுத்துவிட்டார்.
 ("கலைவாணர் வாழ்வில் நகைச்சுவைகளும்,
 சிந்தனைகளும்' நூலிலிருந்து)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.