கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கிரேஸிக்குப் பிறகு நாடகம் தொடரும்!

கிரேஸி மோகன் இல்லாமல் அவரது நாடகம் நடத்த முடியுமா? என்று கேட்கிறீர்களா முடியும் என்று கூறுகிறார் அவரது தம்பியும், நடிகருமான

News image
Updated On :15 ஜூலை 2019, 7:56 am

சலன்

கிரேஸி மோகன் இல்லாமல் அவரது நாடகம் நடத்த முடியுமா? என்று கேட்கிறீர்களா முடியும் என்று கூறுகிறார் அவரது தம்பியும், நடிகருமான "மாது' பாலாஜி. கிரேஸி மோகன் திரைக்கதை வசனகர்த்தா மட்டும் அல்ல, அவர் ஒரு நடிகர், கவிஞர், என்று சொல்லிக்கொண்டே போகலாம். நாடகம், சினிமா இரண்டிலும் கோலோச்சியவர். 

சுமார் இரண்டு மாமாங்கம் திரை உலகில் கொடி கட்டிப் பறந்தார். அப்பொழுதும் கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகங்களை விடாமல் போட்டுக் கொண்டு தான் இருந்தார். 

அவர் இருந்தே போதே பல்வேறு நாடகங்களை, எங்கள் குழு நாடாகங்களாக்கி போட்டுள்ளது. இந்த நாடகத்தில் எல்லாம் அவர் நடிக்கவே இல்லை. காரணம், 1985 - ஆம் ஆண்டு முதல் சுமார் 25 -ஆண்டு காலம் அவர் கிரேஸி  கிரியேஷன்ஸ் நாடகக் குழுவிற்கு நாடகங்கள் எழுதி மட்டுமே கொடுப்பார். அவர் நடிப்பதில்லை. காரணம் அவர் திரை துறையில் மிகவும் பிஸியாக இருந்தார். “"சாக்லேட் கிருஷ்ணா'” என்ற சமீபத்திய நாடகத்தில் மட்டும் தான் அவர் முழுமையாக நடித்தார். 

மற்றதில் எல்லாம் நேரம் இருந்தால்,  பத்து நிமிடம் வரும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்து விட்டுப் போவார். அதனால் அவர் இல்லாமல் நாங்கள் அவரது வசனங்களைக் கொண்டே நாடகத்தை நகர்த்திக் கொண்டு போவோம். இப்பொழுதும் நாங்கள் அதே மாதிரி அவரது நாடகத்தை போடப்  போகிறோம். 

கிரேஸி கிரியேஷன்ஸ் மோகன் எழுதி உள்ள நாடகங்களை விடாமல் போடுவோம். தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் எங்கள் நாடகங்கள் நடக்கும். இதைதான் அவரும் விரும்பினார். அதையே நாங்களும் நிறைவேற்ற போகிறோம்” என்று உறுதியாகக் கூறினார் "மாது' பாலாஜி.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.