விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காந்தள் பூக்கள்

காந்தள் பூ - தமிழக அரசு அங்கீகரித்த மாநில மலராகும். மனிதன் முதலில் தோன்றியதாக சொல்லப்படும் ஆப்பிரிக்க  ஆசியப் பகுதியை தாயகமாகக் கொண்டதாகும்.

News image
Updated On :26 ஏப்ரல் 2020, 5:25 pm IST


காந்தள் பூ - தமிழக அரசு அங்கீகரித்த மாநில மலராகும். மனிதன் முதலில் தோன்றியதாக சொல்லப்படும் ஆப்பிரிக்க  ஆசியப் பகுதியை தாயகமாகக் கொண்டதாகும். பூக்களில் தனித்துவமானது காந்தள் பூக்கள். இது கார்த்திகை மாதத்தில் மழை பொழிந்ததும் வேலிகளில் வரிசையாக பூத்திருப்பது, கார்த்திகை தீபங்கள் ஏற்றியது போல ஜொலிக்கும். காந்தள் பூக்கள் பூக்கும் போது இளம் பச்சை நிறமாகவும், பின்னர் மஞ்சளாகவும், கிச்சிலி நிறமாகவும், இறுதியில் சிவப்பாகி கருஞ் சிவப்பு நிறமாக நிறைந்து ஒளிரும்.

மேலும் இதழ்களின் அடிப்பகுதி ஒரு நிறமாகவும், நடுப்பகுதி வேறு நிறமாகவும், நுனிப்பகுதி மற்றொரு நிறத்திலும் இருக்கும். மலேசியாவில் இம்மலர்களை சீனர்களின் பல வண்ண விளக்குகள் போலிருப்பதாக சொல்வர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.