25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

வாரிசு ஆதிக்கம்!

"ஆடுகளம்' படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானவர் டாப்சி. "வந்தான் வென்றான்', "காஞ்சனா-3', "வை ராஜா வை', "கேம் ஓவர்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:55 pm

DIN


"ஆடுகளம்' படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானவர் டாப்சி. "வந்தான் வென்றான்', "காஞ்சனா-3', "வை ராஜா வை', "கேம் ஓவர்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் வாரிசு நடிகர்கள் புதிய படங்களில் தன்னை ஒப்பந்தம் செய்ய விடாமல் தடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து பேசியிருக்கிரார் டாப்சி, ""சினிமாவில் பிரபலமாக இருப்பவர்களின் குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு தொடர்புகள் அதிகம் கிடைக்கிறது. இதனால் சினிமா வாய்ப்புகளை எளிதாகப் பெற்று விடுகின்றனர். ஆனால் வெளியில் இருந்து வரும் நடிகர் நடிகைகள் பிரபலங்களுடன் அறிமுகமாகவும் தொடர்புகளை உருவாக்கவும் அதிக நாட்கள் தேவைப்படும். இயக்குநர்கள் வெளியில் இருந்து வருபவர்களை நடிக்க வைப்பதற்குப் பதிலாக தனக்கு தெரிந்தவர்களையே நடிக்க வைக்கின்றனர். நான் வாரிசுகள் ஆதிக்கத்தினால் சில பட வாய்ப்புகளை இழந்து வேதனைப்பட்டேன்.

இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படுவதற்கு ரசிகர்களும் காரணம். சினிமா குடும்பத்தில் இருந்து அறிமுகமாகிறவர்களின் படங்களை பார்க்கவே அவர்கள் ஆர்வமாக செல்கிறார்கள். மற்றவர்களின் படங்களைப் பார்க்க மறுக்கின்றனர்''  என்று வேதனை தெரிவித்துள்ளார் டாப்சி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.