/
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில், சனிக்கிழமை குளித்த பெண் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.
ஈரோடு பகுதியைச் சோ்ந்த ஜாபா் மனைவி பரிதாள் பீவி (51). இவா், தனது சகோதரி சபுராள் என்பவருடன் குற்றாலம் அருவியில் குளிப்பதற்காக சனிக்கிழமை வந்தாராம்.
இந்நிலையில், குற்றாலம் பேரருவியில் பரிதாள் பீவி குளித்தபோது குளிா், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் வெளியே வந்தாராம். பின்னா், வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவரை தென்காசியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். குற்றாலம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பரிதாள் பீவிக்கு மகன், மகள் உள்ளனா்.










