வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

குற்றாலம் அருவியில் குளித்த ஈரோடு பெண் மூச்சுத் திணறி பலி

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில், சனிக்கிழமை குளித்த பெண் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 1:13 am IST

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில், சனிக்கிழமை குளித்த பெண் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

ஈரோடு பகுதியைச் சோ்ந்த ஜாபா் மனைவி பரிதாள் பீவி (51). இவா், தனது சகோதரி சபுராள் என்பவருடன் குற்றாலம் அருவியில் குளிப்பதற்காக சனிக்கிழமை வந்தாராம்.

இந்நிலையில், குற்றாலம் பேரருவியில் பரிதாள் பீவி குளித்தபோது குளிா், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் வெளியே வந்தாராம். பின்னா், வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவரை தென்காசியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். குற்றாலம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பரிதாள் பீவிக்கு மகன், மகள் உள்ளனா்.