ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தண்ணீரிலும் கரோனா வைரஸ்

உலகம் முழுவதும் கரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதில் பிரான்சும் தப்பவில்லை. அங்கு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் உயிரிழந்துள்ளனர்.

News image
Updated On :19 ஜூலை 2020, 12:30 am

ஆ. கோ​லப்​பன்

உலகம் முழுவதும் கரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதில் பிரான்சும் தப்பவில்லை. அங்கு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு போர்க்கால அடிப்படையில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தலைநகர் பாரீஸ் முழுவதும் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

பாரீஸ் நகரின் சீன் நதி மற்றும் எவர்கால்வாயிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, இந்த சுத்தப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது சற்று அசுத்தமாக உள்ளதால் பொதுமக்களின் உபயோகத்துக்கு வழங்கப்படுவதில்லை. பூங்காக்கள், நகரில் உள்ள நீருற்றுகள் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்த தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அதிகாரிகளுக்கு திடீரென எழுந்த சந்தேகத்தின் பேரில் சீன் நதி மற்றும் எவர்கால்வாய் தண்ணீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த சோதனையின் முடிவில் அவர்களுக்கு மிகபெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த தண்ணீரில் கரோனா இனத்தைச் சேர்ந்த வைரஸ் இருந்தது.

இது தவிர நகரின் 27 இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீரில் நான்கில் சிறிய அளவிலான வைரஸ் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தண்ணீரை தூய்மையாக்கும் பணிகளை மேற்கொள்ள பிரான்ஸ் அரசு உத்தரவிட்டு உள்ளது. 
தண்ணீரிலும் கூட கரோனா வைரஸ் இருந்தது பெரும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.