தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தெரியுமா இந்தியாவின் கடைசி கிராமம்

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் கின்னாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். சிட்கல் இந்த கிராமத்தை கின்னாரஸ் என்றும் அழைப்பர்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 12:30 am

ஆ. கோ​லப்​பன்

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் கின்னாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். சிட்கல் இந்த கிராமத்தை கின்னாரஸ் என்றும் அழைப்பர்.

கடவுளுக்கும், மனிதனுக்கும் இடைப்பட்ட பூமி என்பதாகும் இதன் பொருள்.

இந்தியாவின் கடைசி கிராமம் இது. இத்துடன் தரைவழி சாலை முடிகிறது. பர்மிட் இல்லாமல் பயணிக்கும் கடைசி கிராமமும் இது தான். இதையடுத்து சீன எல்லை துவங்குகிறது.

நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் கடைசி வரை இங்கு குளிர்காலம். பனிமூடி கிராமமே தெரியாது. சாலைகளை மூடிவிடுவர். கிராமத்தின் மொத்த ஜனத்தொகை மிகவும் குறைவு. அனைவரும் ஹிமாச்சல் பிரதேசத்தின் மற்ற கிராமங்களுக்கு சென்று பிழைப்பர். மார்ச் மாத கடைசியில் இதற்கான சாலை திறக்கும் போது கிராம மக்கள் திரும்ப வந்து அக்டோபர் மாதம் வரை  இங்கு வாழ்வர்.

இயற்கை கொஞ்சும் பனி மலைகளும், ஆப்பிள் பண்ணைகளையும், மர வீடுகளையும் இங்கு ரசிக்கலாம். கண் கொள்ளா பள்ளத்தாக்குகள், கூடுதல் கவர்ச்சியாகும். இச்சமயத்தில் சுற்றுலா பயணியர் ஏராளமாய் இங்கு வருவர்.

இக்கிராமத்தில் உள்ள வீடுகள் மரத்தால் ஆனவை. பள்ளிக்கூடம் உள்பட பொது இடங்களில் மேலே தகடு கூரை போட்டிருப்பர்.

இங்கு புத்த கோயிலும், இந்து பெண் தெய்வ கோயிலும் உள்ளன. இக்கிராமம் கடல் மட்டத்திலிருந்து 3,450 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இந்தியாவின் மிகத் தூய்மையான காற்றைக் கொண்டது இக்கிராமம் என டில்லி ஐ.ஐ.டி. ஆய்வுக்குழு சான்று வழங்கியுள்ளது.

டில்லியில் இருந்து 600 கி.மீ. தொலைவிலும், சிம்லாவிலிருந்து 250 கி.மீ. தொலைவிலும் இக்கிராமம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.