திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

"சிங்கிள் ஷாட்' சினிமா

புதுப் புது முயற்சிகளில் அவ்வப்போது சினிமாக்கள் உருவாவதுண்டு.  அந்த வரிசையில், இதோ ரசிகர்களை மயக்கத்தில்  ஆழ்த்த வரவிருக்கும் படம் "யுத்த காண்டம்'.

News image
Updated On :29 நவம்பர் 2020, 12:30 am

DIN

புதுப் புது முயற்சிகளில் அவ்வப்போது சினிமாக்கள் உருவாவதுண்டு.  அந்த வரிசையில், இதோ ரசிகர்களை மயக்கத்தில்  ஆழ்த்த வரவிருக்கும் படம் "யுத்த காண்டம்'.  "கன்னிமாடம்' படத்தின் மூலம் பரவலான பாராட்டுதல்களைப் பெற்ற  ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.  "கோலி சோடா 2' க்ருஷா குரூப்  கதாநாயகியாக நடிக்கிறார்.  இவர்களுடன் யோக் ஜேபி, சுரேஷ் மேனன்,  போஸ் வெங்கட்டும் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 

ஆனந்த்ராஜன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக இனியன் ஜே.ஹேரிஸ் பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளர் ஹரி சாய் இசையமைக்கிறார். மனித வாழ்க்கையில் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதும், பிரச்னை என்றால் காவல் நிலையம் செல்வதும் தவிர்க்க முடியாத ஒன்றே. அப்படித்தான், ஒரு விபத்தில் சிக்கும் இருவர் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் காவல் நிலையம் செல்ல நேர்கிறது. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை எதார்த்தமாக பதிவு செய்வதே திரைக்கதை. 

இப்படத்துக்காக சிங்கிள் ஷாட் காட்சிகள் அதிகளவில் எடுக்கப்பட்டுள்ளன. வசனங்களை போஸ் வெங்கட் எழுதியுள்ளார். படத்தை பார்க்கும்போது ரசிகர்களுக்கு கதையின் நிகழ்வுகளை அருகிலிருந்து பார்க்க வேண்டும் என்று தோன்ற வேண்டும் என்பதால்  சிங்கிள் ஷாட்டில் படம் உருவாகியுள்ளது.

இதற்காக  முழுபடப்பிடிப்பு போலவே ஒத்திகையும் நடந்துள்ளது.  சிங்கிள் ஷாட்டில் பாடல்கள், சண்டைக்காட்சிகள் பதிவு செய்வது என்பது மிகவும் சவாலானது. ஆனால், எந்த நெருடலுமே ஏற்படாத வண்ணமே இவை அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.