தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குடும்பக் கட்டுப்பாடு

பட்டிமன்ற மேடை. கவியரசர் கண்ணதாசன்  ஒரு அணியின் தலைவர். எதிர் அணியில் அவருடைய சீடர் மக்கள் கவிஞர் அரு.நாகப்பன். அவர் கவியரசரை விட வயதில் இளையவர்.

News image
Updated On :25 அக்டோபர் 2020, 12:30 am

DIN


பட்டிமன்ற மேடை. கவியரசர் கண்ணதாசன்  ஒரு அணியின் தலைவர். எதிர் அணியில் அவருடைய சீடர் மக்கள் கவிஞர் அரு.நாகப்பன். அவர் கவியரசரை விட வயதில் இளையவர்.

பட்டிமன்றத்தலைவர் ம.பொ.சிவஞானம். தலைப்பு: குடும்பக் கட்டுப்பாடு 
முதலில் பேசிய அரு.நாகப்பன் சபைத் தலைவருக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார்:

"கவியரசர் கண்ணதாசன் இந்த மேடைக்குச் சம்பந்தமில்லாதவர். அவருக்குப் பதினான்கு குழந்தைகள். ஆகவே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதியில்லை. முதலில் மேடையை விட்டு அவரைக் கீழே இறக்குங்கள்!'

சபை சிரிப்பொலியால் அதிர்ந்தது. தன்முறை வந்தவுடன் பேச வந்த கவியரசர், "எனக்குப் பதினான்கு குழந்தைகள் என்பது உண்மை. குடும்பக் கட்டுப்பாட்டின் அருமை எனக்குத்தான் நன்றாகத் தெரியும். நாகப்பனுக்கு இரண்டே இரண்டு குழந்தைகள். அவருக்குத்தான் தகுதியில்லை. அவரை முதலில் கீழே இறக்குங்கள்' என்று ஒரு போடு போட்டாரே பார்க்க வேண்டும்.

சபையில் ஆரவாரம் அடங்க ஐந்து நிமிடங்கள் ஆயிற்று!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.