நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

1 ரூபாய்க்கு  உணவு

கிரிக்கெட் பிரபலங்களும் இப்போது உணவு வழங்கும் சேவையில் இறங்கியிருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் 1 ரூபாய் உணவு திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்.

News image
Updated On :14 பிப்ரவரி 2021, 6:00 am IST


கிரிக்கெட் பிரபலங்களும் இப்போது உணவு வழங்கும் சேவையில் இறங்கியிருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் 1 ரூபாய் உணவு திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்.  பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், தன்னுடைய கிழக்கு தில்லி தொகுதியில் மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் "ஜன ரசோய்' திட்டத்தைத் தொடங்கி உணவு சேவை செய்து வருகிறார்.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கவுதம் கம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.

முழு நேர அரசியல்வாதியாகி விட்ட கம்பீர், இப்போது தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கிழக்குத் தில்லியில் உள்ள காந்தி நகர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தை சமையல் கூடமாக கவுதம் கம்பீர் மாற்றியுள்ளார். நவீன வசதிகளுடன் இந்த சமையற் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் ஒரே சமயத்தில் 100 பேர் வரை அமர்ந்து உணவு அருந்த முடியும். தற்போது, கரோனா காரணமாக 50 பேர் மட்டுமே ஒரே சமயத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். மதிய உணவாக அரிசி சோறு, பருப்பு, காய்கறிகள் வழங்கப்படுகின்றன.  மதிய உணவுக்காக ஒரே ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறார்கள். இந்த மதிய உணவு திட்டம் முற்றிலும் கவுதம் கம்பீர் அறக்கட்டளை மூலம் நடத்தப்படுகிறது. எந்த விதமான அரசு உதவியும் பெறவில்லை . தொடர்ந்து ஜனவரி 26 -ஆம் தேதியன்று குடியரசு தினத்தையொட்டி தில்லி அசோக் நகரிலும் இதே போன்ற உணவகத்தைத் திறந்துள்ளார். 

இது பற்றி கவுதம் கம்பீரிடம் கேட்ட போது சொன்னார்: 

""தெருவோரத்தில் வசிப்பவர்கள் ஒரு நாளைக்கு இரு வேளை கூட உணவு சாப்பிட முடியாத நிலையில் உள்ளனர்.  இதனைப் பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது. தலைநகர் தில்லியில் குறைந்த செலவில் மக்களுக்கு உணவு வழங்க உணவகங்கள் இல்லை. ஜாதி, மதம், இனம் கடந்து அனைவரும் நல்ல சத்தான ஆரோக்கியமான உணவை பெற வேண்டும். பொது முடக்கக் காலத்தில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலையில்தான் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். தில்லியில் வசிக்கும் ஒவ்வொரு மக்களும் நல்ல ஆரோக்கியமான உணவு குடிநீர் வசதியை பெற வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.  இங்கு ஒருநாளில் ஐநூறு பேருக்கு உணவு வழங்கப்படும். சிறப்புத் தினங்களில், அரிசி சாதம், பருப்பு, காய்கறி கூட்டு ஆகியவை வழங்கப்படும். உணவு தேவைப்படும் நபர்கள் திரும்பவும் வாங்கிக்கொள்ளலாம். என்னுடைய கிழக்கு தில்லி தொகுதியில் இது போன்று 10 உணவகங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளேன். இலவசம் என்பதை விட ஒரு ரூபாய் வாங்குவது சிறந்தது. எனவே தான் 1 ரூபாய் வசூலிக்கிறோம்'' என்கிறார்  கவுதம் கம்பீர். 

இந்த உணவு சேவை திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் பலரும் கவுதம் கம்பீரை பாராட்டி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.