/

பழைமையான பனி மனிதன்

19 செப்டம்பர் 1999-ஆம் ஆண்டில் இரண்டு ஜெர்மன் சுற்றுலா பயணிகள் மலையில் சுற்றுலா சென்ற பொழுது அந்த இடத்தில் நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு மனித உடலை பனி கட்டியில் புதைத்து வைத்திருப்பதைக் கண்டார்கள்.

News image
Updated On :13 பிப்ரவரி 2022, 12:30 am

தினமணி

19 செப்டம்பர் 1999-ஆம் ஆண்டில் இரண்டு ஜெர்மன் சுற்றுலா பயணிகள் மலையில் சுற்றுலா சென்ற பொழுது அந்த இடத்தில் நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு மனித உடலை பனி கட்டியில் புதைத்து வைத்திருப்பதைக் கண்டார்கள்.

ஏதோ கொலை நடந்து அதை புதைத்து வைத்து உள்ளார்கள் என எண்ணி உடனடியாக காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் வந்து உடலை மீட்டு பரிசோதனை செய்த போது தான் தெரிந்தது அந்த உடல் பல காலம் ஆனது என. அதன் பிறகு வந்த சோதனையில் 4 ஆயிரம் ஆண்டுகளாக அந்த உடல் பனியில் புதைக்கப்பட்டிருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைப் பற்றிய சில தகவல்கள் அந்த இறந்த உடல் மூலம் பெறப்பட்டது.

இந்த உடல் தற்போது இத்தாலியில் உள்ள தெற்கு டைரோல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.