கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

மன அழுத்தத்தை போக்கும்  யோகா விருட்சஸனம்

மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும்நிலையில் நாள்தோறும் விருட்சஸனயோகா பழகி வந்தால் மன அமைதி, சமநிலை உணர்வும் கிடைக்கும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:27 am

ஆா்.மோகன்ராம்



மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் நாள்தோறும் விருட்சஸனயோகா பழகி வந்தால் மன அமைதி, சமநிலை உணர்வும் கிடைக்கும். இந்த ஆசனம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்ததை நிறைவேற்ற உதவியாக இருக்கும்.

செய்முறை: விருட்சம் என்பதற்கு மரம் என்று பொருள்.

1.கண்களை முடிய நிலையில், வலது முழங்காலை மடக்கி வலது பாதம்  இடது காலின் உள் தொடையில் இருக்குமாறு வைக்கவும் .
2.இடது கால் நேராக அதாவது 90 டிகிரி கோணத்தில் இருக்குமாறு சரி செய்துகொள்ளவும்.
3. இரு கைகளை மார்பிற்கு நேராக  கும்பிடும் மாதிரி வைக்கவும். 
4. இரு கைகளையும்  மெதுவாக தலைக்கு மேலே உயர்த்த வேண்டும்.
5.மெதுவாக 5-10 முறை மூச்சை நன்றாக உள்ளிழுத்து நிதானமாக வெளிவிட வேண்டும்.
6. இரு கைகளையும் மெதுவாக கீழ்இறக்கி கொள்ளவும், வலதுகாலை மெதுவாக கீழ்இறக்கி  இயல்பு நிலைக்கு வரவேண்டும். இதே போல் இடது காலை மாற்றி செய்யவேண்டும்.

நம் மனதை வலிமைப்படுத்துகிறது. மனம் அலைந்து திரிவதை தடுத்து சமநிலைப்படுத்துகிறது. அமைதியான சமநிலை உணர்வை உருவாக்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.