தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மீண்டும் பயோபிக்

சூர்யா நடித்து வெளிவந்த படம் "சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் வாழ்க்கை, அவரின் போராட்டம், அதன் பின் அவர் வாழ்க்கையில் கிடைத்த வெற்றி என பயோபிக் படமாக இது உருவானது.

News image
Updated On :5 மார்ச் 2023, 12:30 am

DIN


சுதா கங்கோரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த படம் "சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் வாழ்க்கை, அவரின் போராட்டம், அதன் பின் அவர் வாழ்க்கையில் கிடைத்த வெற்றி என பயோபிக் படமாக இது உருவானது. கரோனா பொது முடக்க காலத்தில் ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 

சூர்யாவுக்கும் பெரும் திருப்பு முனை உண்டானது. தேசிய விருது மேடையை இப்படம் அலங்கரித்ததுடன், சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுதந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு பயோபிக் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.  "சிறுத்தை' சிவா இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. அவர் ஜோடியாக ஹிந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதையடுத்துதான் பயோபிக் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார் சூர்யா. பிரிட்டானியா நிறுவனத்தின் மறைந்த தொழிலதிபர் ராஜன் பிள்ளை வாழ்க்கை கதையில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை பிருத்விராஜ் எழுதி இயக்க இருக்கிறார்.கடந்த சில நாள்களுக்கு முன் பிருத்விராஜை, சூர்யாவும் ஜோதிகாவும் சந்தித்துப் பேசினர். அது இதற்கான சந்திப்புத்தான் என்றும் கூறப்படுகிறது. 

முறைப்படி பிரிட்டானியா நிறுவனத்தின் மறைந்த தொழிலதிபர் ராஜன் பிள்ளையின் குடும்பத்தை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சில நாள்களில் சூர்யா, ஜோதிகா, பிருத்விராஜ் மூவரும் ராஜன் பிள்ளையின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இதர நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.