தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

கார்த்தியின் 'மார்ஷல்'

'வா வாத்தியார்', 'சர்தார் 2' என இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்ட கார்த்தி, தனது 29-ஆவது படத்துக்கு பூஜை போட்டுள்ளார்.

News image
Updated On :20 ஜூலை 2025, 11:29 am

'வா வாத்தியார்', 'சர்தார் 2' என இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்ட கார்த்தி, தனது 29-ஆவது படத்துக்கு பூஜை போட்டுள்ளார். கதைகள் தேர்வில் தனி கவனம் செலுத்தி வரும் கார்த்தி, படத்திற்குப் படம் வெவ்வேறு ஜானர்கள் அமையுமாறு பார்த்துக் கொள்வதுடன், தனது பாத்திரத் தேர்விலும் தனித்துவத்தை நிலைநாட்டி வருகிறார்.

இந்தாண்டில் கார்த்தியின் நடிப்பில் 'வா வாத்தியார்' முதலிலும், அதனைத் தொடர்ந்து 'சர்தார் 2'வும் வெளியாக உள்ளது. இந்நிலையில்தான் தனது 29-ஆவது படத்தை கையில் எடுக்கிறார். 'டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இப்படத்தை இயக்குகிறார். இயக்குநர் தமிழின் சொந்த ஊர் ராமேசுவரம் என்பதால், ராமேசுவரம் - இலங்கை கடற்பகுதியில் நடந்த, கடற்கொள்ளையர்கள் பற்றிய கதை ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். இதுதான் படமாகவுள்ளது.

இது ஒரு பீரியட் ஃபிலிம். படத்துக்கு 'மார்ஷல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திற்கு பஹத் பாசிலிடம் நடிக்கக் கேட்டனர். அவரது தேதிகள் கிடைக்காமல் போனதால், அந்த ரோலில் நிவின் பாலி நடிக்கிறார். ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் முதன் முறையாக கார்த்தியின் ஜோடியாகிறார்.

சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின் ராஜ் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் அருண் வெஞ்சாரமூடு போன்ற சிறந்த திறமையாளர்கள் பணிபுரிய உள்ளனர்.

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு மற்றும் இஷான் சக்சேனா தலைமையிலான ஐ.வி.ஒய். எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் 1960-களின் ராமேசுவரத்தை மீண்டும் உருவாக்கும் விரிவான அரங்குகள் இடம்பெற இருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் அகில இந்திய அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. காரைக்கால், ராமேசுவரம் ஆகிய கடற்பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.