இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

திருக்குறளும் அரிய தகவல்களும்

 * திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு - 1812  * திருக்குறளின் முதல் பெயர் - முப்பால்  * திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133  * திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380  * திருக்கு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:43 pm IST

 * திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு - 1812

 * திருக்குறளின் முதல் பெயர் - முப்பால்

 * திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133

 * திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380

 * திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் - 700

 * திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 250

 * திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் - 1330

 * திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000

 * திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் - 42,194

 * திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.

 * திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை.

 * திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்

 * திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி

 * திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒü

 * திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்

 * திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்

 * திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து - னி

 * திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் - ளீ, ங

 * திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள்

 * திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்

 * திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்

 * திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்.

 * திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் - பரிமேலழகர்

 * திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

 * "எழுபது கோடி' என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

 * "ஏழு' என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

 * திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - ஒன்பது

 * திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

 * திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

 * திருக்குறள் நரிக்குறவர் பேசும் "வக்ரபோலி' மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.