நண்பர்களின் நல்லியல்புகள்
நட்பைப் போல செய்துகொள்வதற்கு உலகில் எதுவுமில்லை. அத்தகு சிறப்புப் பெற்றது நட்பு. நட்பைப் பற்றி பல புலவர்கள் பலவாறாக எடுத்துரைத்துள்ளனர்; இடித்துரைத்துள்ளனர். ஒருவனின் குணத்தையும் குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் கண்டு நட்புக் கொள்ளல் நலம் பயக்கும்; வளம் பயக்கும்.










