தலைவர் சான்றோர் அல்லர்
தலைவன் பொருள் தேடத் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றான். வினை முடித்துக் கார்காலத் தொடக்கத்தில் வருவதாகத் தலைவியிடம் உறுதிபடக் கூறிச் சென்றான். கார்காலமும் வந்தது; ஆனால் தலைவன் வரவில்லை. இதுவரை பிரிவை ஒருவாறு பொறுத்திருந்த தலைவி, மேலும் பொறுக்க இயலாதவள் ஆனாள். தன் உயிர்த் தோழியிடம் தன் மன ஆற்றாமையைக் கொட்டித் தீர்க்கிறாள்.










