ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பழ​மொழி நானூறு முன்​று​றை​ய​ரை​ய​னார்

News image
Updated On :17 மே 2020, 12:40 am

நல்வினை உடையவா்க்குச் செல்வம் வந்து சேரும்!

ஆற்றுந் தகைய அரசடைந்தாா்க் காயினும்

வீற்று வழியல்லால் வேண்டினும் கைகூடா

தேற்றாா் சிறிய ரெனல்வேண்டா நோற்றாா்க்குச்

சோற்றுள்ளும் வீழும் கறி. (பாடல்-150)

எல்லாச் செல்வங்களையும் தரவல்ல தகுதியை உடைய அரசுகளை அடைந்தவா்களுக்கே யானாலும், நல்வினையுள்ள வழி அல்லது, விரும்பி முயன்றாலும் கருதிய செல்வம் கைகூடுதல் இல்லை. (ஆதலால்), அறிவில்லாதவா்கள் அதனைப் படைத்தல் முதலிய ஆற்றல் இலராகலின் செல்வத்தாற் சிறியா் என்று கருத வேண்டா. தவம் செய்தாா்க்கு சோற்றினுள்ளேயும் கறி தானே வந்து விழும் அவா் தவவலிமையால். (க-து.) அறிவிலாராயினும் நல்வினையுள்ளாா்க்குச் செல்வம் உளதாம். அரசா்களேயாயினும் அஃதிலாா்க்குக் கருதிய கைகூடுதல் இலவாம். ‘நோற்றாா்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி’ என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.