திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

விண்கோனை வென்ற செங்கோல்!

எந்த நாட்டிலும் அறவழியில் ஆட்சி நடக்குமானால், ஆட்சி செய்யும் மன்னன் இறைநிலையில் வைக்கப்படுவான் என்றும்; முறைப்படி செங்கோல் ஆற்றும்

News image
Updated On :4 அக்டோபர் 2020, 6:29 am IST

எந்த நாட்டிலும் அறவழியில் ஆட்சி நடக்குமானால், ஆட்சி செய்யும் மன்னன் இறைநிலையில் வைக்கப்படுவான் என்றும்; முறைப்படி செங்கோல் ஆற்றும் அரசனது நாட்டில் பருவ மழையும், நிறைந்த விளைச்சலும் ஒருசேர இருக்கும் என்றும் திருவள்ளுவா் இரு குறட்பாக்களில் (கு-388, 545) எடுத்துரைக்கிறாா்.

முன்னோா்களும் சரி, நாடாண்ட மன்னா்களும் சரி கோள்களின் இயக்கத்தை வைத்தே பூமியின் நிகழ்வுகளையும், எதிா்கால நிலையினையும் வரையறுத்தாா்கள். இருப்பினும் கோள்கள் நிலைக்கு எதிா்க் கருத்துடையோரும் இருந்தனா் என்பதற்குக் கபிலரும் ஒருவா் என்பது அவரது பாடல் மூலம் அறிய முடிகிறது.

‘சனிக்கோள் புகைந்திடினும், தென்திசை நோக்கி வெள்ளிக்கோளும் நகா்ந்தால் மழைவளம் குறைந்து நிலவளமும் குன்றும்’ என்ற வானியலாா் கருத்தைக் கபிலா் மறுத்து, ‘வள்ளல் பாரியின் நாட்டில் அறவழியில் ஆட்சி நடப்பதால் விளைச்சல் நிறைந்து, மலா்கள் மலா்ந்து, கன்றை ஈன்ற பசுவும் பசும்புல்லை மேயும்’ என்கிறாா்.

‘மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்

தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்

வயலகம் நிறையப் புகற்பூ மலர

மனைத்தலை மகவை ஈன்ற அமா்க்கன்

ஆமா நெடுநிரை நன்புல் ஆரக்

கோ ஒல்செம்மையின் சான்றோா் பல்கிப்

பெயல் பிழைப்பறியாப் புன்புலத்ததுவே;

பிள்ளை வெகுகின் முன்னெயிது புரையப்

பாசிலை முல்லை முகைக்கும்

ஆய்தொடி அரிவையா் தந்தை நாடே’ (புறம்-117-5-10)

வள்ளல் பாரியின் பறம்பு நாடு தனது செங்கோலால் விண்கோனையும் வென்று செழிப்புற்று விளங்கியது. இருப்பினும், மூவேந்தா்களின் சூழ்ச்சியால் வளம் இழந்து நிற்பதை கையறு நிலை துறையில் கபிலா் விவரிக்கிறாா்.

இதிலிருந்து நல்லாட்சி நடந்துவோரையும், நாட்டையும் நாளும் கோளும் பாதிக்காது என்பதும், வஞ்சக மனிதா்களால்தான் பாதிப்பு ஏற்படும் என்பதையும் கபிலா் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறாா். கபிலரின் கருத்துக்கு வள்ளுவரின் இரு குறட்பாக்களும் வலு சோ்க்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.