தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

ஒல்லென்று ஒலிக்கின்ற கடல் நீரானது பார்மேல் ஏறிப் பாய்வதுபோலத் தோன்றும் துறைகளுக்கு உரியவனே, கேளாய்! தீமையானவை எல்லாம் ஆகிவருவதுபோல முதலிலே தோன்றினாலும் உறுதியாகக் கெட்டே போகும்.

News image
Updated On :25 அக்டோபர் 2020, 4:38 pm

DIN

அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ? ஒல்லொலிநீர்
பாய்வதே போலும் துறைவ! கேள்; தீயன
ஆவதே போன்று கெடும் (பாடல்}173)

ஒல்லென்று ஒலிக்கின்ற கடல் நீரானது பார்மேல் ஏறிப் பாய்வதுபோலத் தோன்றும் துறைகளுக்கு உரியவனே, கேளாய்! தீமையானவை எல்லாம் ஆகிவருவதுபோல முதலிலே தோன்றினாலும் உறுதியாகக் கெட்டே போகும். ஆதலால், பாவத்தைச் செய்பவர்களுடைய அரிய பொருளால் கிடைக்கும் ஆக்கத்தை, நல்லவற்றைச் செய்து வாழ்பவர் என்றாவது விரும்புவாரோ? விரும்பார். "தீயன ஆவதே போன்று கெடும்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.