தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மலைப்புறங்களிலே மூங்கிலோடு மூங்கில்கள் உரசிக் கொண்டிருக்கின்ற மலைநாடனே!

News image
Updated On :15 ஆகஸ்ட் 2021, 3:53 pm

தினமணி

சிறந்த நுகர்ந்தொழுகும் செல்வம் உடையார்
அறஞ்செய்து அருளுடையர் ஆதல் - பிறங்கல்
அமையோடு வேய்கலம் வெற்ப! அதுவே
சுமையோடு மேல்வைப்பா மாறு. (பாடல்-215)


மலைப்புறங்களிலே மூங்கிலோடு மூங்கில்கள் உரசிக் கொண்டிருக்கின்ற மலைநாடனே! சிறந்தவனாகிய இன்பங்களை அனுபவித்து வாழும் செல்வச் செழுமை உடையவர்கள், அறம் செய்து பிற உயிர்களிடத்து அருள் உடையவராகவும் ஆதல், பொற்சுமையோடு அதன்மேல் மணிகளையும் வைத்துக்கொண்டு செல்வது போன்றதாகும். செல்வர்கள் தாம் இன்புறுவதுடன், அறமும் அருளும் உடையவராகவும் விளங்குதல் சிறப்புடையதாகும். "சுமையோடு மேல்வைப்பா மாறு' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.