பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
கற்றாற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார்சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் - எற்றெனின்தானும் நடவான் முடவன் பிடிப்பூணி


கற்றாற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார்
சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் - எற்றெனின்
தானும் நடவான் முடவன் பிடிப்பூணி
யானையோ டாடல் உறவு. (பாடல்- 192)
கற்று வல்லவர்களான பெரியோரைச் சினங்கொள்ளச் செய்து கல்லாதவர்கள் சொற்களைக் கொழித்துக்கொண்டு மனவெழுச்சியுடன் எழுதல் எதுபோன்ற தென்றால், தானும் நடக்காத முடவன் ஒருவன், தன்னுடைய பிடிப்பை ஊணிக்கொண்டு சென்று, யானையோடு உறவாடுதலைப் போன்றதாகும். "முடவன் பிடிப்பூணியானையோ டாடல் உறவு' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...