தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பாற்கடல்  சிறியது!

ஆசைதான் பிறவிக்கான விதை. ஆசை வயப்படுவதால்தான் தொடர்ந்து "பிறவிப் பெருங்கடலில்' நாம் தத்தளித்துக்கொண்டே இருக்கின்றோம்.

News image
Updated On :13 மார்ச் 2021, 6:30 pm

திருப்புகழ் மதிவண்ணன்

ஆசைதான் பிறவிக்கான விதை. ஆசை வயப்படுவதால்தான் தொடர்ந்து "பிறவிப் பெருங்கடலில்' நாம் தத்தளித்துக்கொண்டே இருக்கின்றோம்.

"அவா என்ப எல்லாஉயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பினும் வித்து' (குறள்)
"எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி அவதாரம்'

என்று பாடுகின்ற அருணகிரிநாதர்,
இவர்போய் அவராய் அவர்போய் இவராய்
இதுவே தொடர்பாய் வெறிபோல
ஒருதாய் இருதாய் பலகோடியதாய்
உடனே அவமாய் அழியாதே!

என்றும், பிறவிகள் பல காண்பதால் நமக்கு அன்னையர்களும் அதிகம் என்பதைப் புரிய வைக்கிறார். பட்டினத்தாரும் "அன்னை எத்தனை எத்தனையோ? அப்பன் எத்தனை எத்தனையோ? இன்னும் எத்தனை எத்தனை ஜென்மமோ?' என்கிறார்.

குருநமசிவாயர் இக்கருத்தை அதி அற்புதமாக விளக்கிக் கூறுகின்றார். "நான் பல பிறவிகள் கண்டுள்ளேன். ஒவ்வொரு பிறப்பிலும் எனக்கு வாய்த்த அன்னையர்களிடம் பால் பருகியுள்ளேன். அவ்வாறு நான் பருகிய தாய்ப்பாலை ஒருங்கு கூட்டினால் திருமால் பள்ளிகொண்டிருக்கும் பாற்கடல்கூட சிறியதாகிவிடும்'.

எடுத்த பிறப்பெல்லாம் எனக்குவந்த தாய்மார்
கொடுத்த முலைப்பால் அனைத்தும்கூட்டின் - அடுத்தவிறல்
பன்நாகத்து அணைதுயிலும் பால் ஆழியும் சிறிதாம்
மன்னா சிதம்பர தேவா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.