மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மானைப் போன்று மருளும் கண்களை உடையவளே! வீரங்கெழுமிய பெருவேந்தர்கள் யானையைக் கொண்டே யானைகளைக் கட்டிப் பிடித்துக் கொள்வார்கள்.

News image
Updated On :10 அக்டோபர் 2021, 12:30 am

தினமணி

ஆணம் உடைய அறிவினார் தந்நலம்
மானும் அறிவி னவரைத் தலைப்படுத்தல்
மானமர் கண்ணாய்! மறங்கெழு மாமன்னர்
யானையால் யானையாத் தற்று.  (பாடல்-223)

மானைப் போன்று மருளும் கண்களை உடையவளே! வீரங்கெழுமிய பெருவேந்தர்கள் யானையைக் கொண்டே யானைகளைக் கட்டிப் பிடித்துக் கொள்வார்கள். அதுபோலவே தம் உள்ளத்திலே நன்மை உடையவர்களான அறிவுடையோர், தமது நலத்தை ஒத்த அறிவாளிகளையே தம்முடன் சேர்த்துக் கொள்வதுமாகும். அறிவால் அறிவாளரை வசப்படுத்த முடியுமேயன்றி அறிவற்றோரால் அறிவாளரை வசப்படுத்த முடியாது என்பது கருத்து. "யானையால் யானையாத் தற்று' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.