அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

எங்கண் ஒன்று இல்லை, எமர் இல்லை, என்று, ஒருவர்தங்கண் அழிவு தாம் செய்யற்க- எங்கானும்நன்கு திரண்டு பெரியவாம், ஆற்றவும்முன் கை நெடியார்க்குத் தோள்.(பாடல்-267)

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 11:10 am

தினமணி


எங்கண் ஒன்று இல்லை, எமர் இல்லை, என்று, ஒருவர்
தங்கண் அழிவு தாம் செய்யற்க- எங்கானும்
நன்கு திரண்டு பெரியவாம், ஆற்றவும்
முன் கை நெடியார்க்குத் தோள்.(பாடல்-267)

(தெ- ரை) என்னிடத்தில் எந்தப் பொருளும் இல்லை. உறவினர்களும் இல்லை என்று எண்ணிக் கலங்கி ஒருவர் அழிவு தரும் தீய செயல்களைச் செய்தல் கூடாது. அவ்வாறு தீச்செயல்களைச் செய்யாமல் கைவிடுபவர்க்கு நலன்கள் அனைத்தும் வந்து சேரும். முன்னங்கைகள் நீண்டவருக்கு அவர்தம் தோள்களும் திரண்டு உருண்டு பெரியவனாக இருத்தல் உறுதி. அதுபோல நல்லோர்க்கு எல்லாம் அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.