மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

மந்திக்குப் பாலூட்டிய பசு... 

"இனம் இனத்தோடுதான் சேரும்' என்பார்கள். நல்லவர்கள் வாழும் நாட்டில் இனம் தாண்டி பாசத்தைப் பொழியும் உயிரினங்கள் இருப்பதை "ஐந்திணை எழுபது' எனும்

News image
Updated On :27 மார்ச் 2022, 5:55 pm IST

"இனம் இனத்தோடுதான் சேரும்' என்பார்கள். நல்லவர்கள் வாழும் நாட்டில் இனம் தாண்டி பாசத்தைப் பொழியும் உயிரினங்கள் இருப்பதை "ஐந்திணை எழுபது' எனும் இலக்கியத்தில் ஒரு காட்சியைப் பதிவு செய்துள்ளார் புலவர் மூவாதியார்.

குறிஞ்சி நிலம். மரக் கிளைகளில் தாவி விளையாடிய ஒரு குரங்கு, ஒரு பலா மரத்தில் தொங்கும் பலாப்பழத்தைப் பறித்து இனிப்பான சுளைகளை வயிறார உண்டுவிட்டு, நீர் பருக மரத்தைவிட்டுக் கீழே இறங்கி வருகிறது. அங்கு நின்று கொண்டிருந்த காட்டுப் பசுவின் மடியை வருடுகிறது... அந்தக் காட்டுப் பசுவும் அக்குரங்கை தன் கன்றாக பாவித்து அதற்குப் பால் தருகிறதாம்.

குறிஞ்சி நாட்டில் பிறந்த தலைவனை "குரங்குக்குப் பால் கொடுக்கும் பசுக்கள் நிறைந்த மலைநாட்டு என் தலைவன், குணத்தில் மிகச் சிறந்தவனாகத்தான் இருக்க இயலும். அதனால், இப்பிறவியில் மட்டுமல்ல எப்பிறவியிலும் குறிஞ்சித் தலைவனை நான் பிரியமாட்டேன்' என்கிறாளாம் தலைவி.

அவர்களுடைய காதல் தூய்மையானது. தூய்மை என்றாலே தெய்வீகம்தான். இத் தூய்மையைப் பெறவே மனிதகுலம் பயணிக்க வேண்டும். அந்தத் தூய்மையான தெய்வீகக் காதலால் இணைந்தவர்கள் சில காலம் பிரிந்து மீண்டும் சந்தித்தால் மெளனமாக அழுவார்கள். அதுதான் தெய்வீகம்.

இதைத்தான் கவியரசர் கண்ணதாசன் "பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி; பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் காதல் சந்நிதி... அதுதான் தெய்வத்தின் சந்நிதி' என்று எழுதினார்.

மந்திக்குப் பாலூட்டிய காட்டுப் பசுவைப் பற்றி புலவர் மூவாதியார்,

மன்றப் பலவின் சுளைவிலை தீம்பழம்
உண்டு வந்து மந்தி முலைவருடக் கன்றமர்ந்து
ஆமா சுரக்கும் அணிமலை நாடனை
யாமாப்  பிரிவ திலம்  (ஐ.எழு.-4)

ஒரு ஜாதிக்குள்ளேயே பல பிரிவுகளை வைத்துக் கொண்டு சண்டை சச்சரவுகளை வளர்த்து, பாசத்தையும், அன்பையும் புறந்தள்ளும் ஆறறிவு படைத்த மானுடர், ஐந்தறிவு படைத்த விலங்குகளிடமிருந்து அன்பையும், பரிவையும், பாசத்தையும் கற்றுக்கொள்ள ஐந்திணை எழுபதில் இக்காட்சியை வைத்துள்ளார் புலவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.