மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

என் நெஞ்சம் இடிபட்டதே!

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமானின் திருவிளையாடலை புதுக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது இப்பாடல்.

News image
Updated On :6 ஜூன் 2022, 4:46 pm

தினமணி

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமானின் திருவிளையாடலை புதுக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது இப்பாடல்.

"நான்மாடக் கூடலாம் மதுரையில் வைகை ஆற்றுக்குக் கரையெடுக்கச் சென்று இறைவன் பொன்னான மேனி புண் கொள்ளுமாறு அடிபட்ட செய்தியை ஆயிரம் ஆண்டுகள் கழித்துக் கேட்கும் எனக்கே நெஞ்சில் இடி இறங்கியது போல் இருக்கிறதே... தமக்காக இறைவன் அடிபட்ட நிகழ்வை நேரில் கண்ட வாதவூரரான மாணிக்கவாசகரின் நெஞ்சம் எவ்வளவு துடித்திருக்குமோ?' என்று வாதவூரரைப் பாடுகிறது இப்பாடல். வள்ளலாரின் அந்தத் திருவருட்பாப் பாடல் இதுதான்:

"வன்பட்ட கூடலில் வாள்பட்ட 
                     வையை வரம்பு இட்டரின்
பொன்பட்ட மேனியில் புண்பட்ட 
                     போதில் புவி நடையாம்
துன்பட்ட வீரர்அந்தோ வாத வூரர்தம் 
                      தூய நெஞ்சம் என்பட்டதோ? 
        கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே!

(கோவை எழிலனின் "உள்ளம் படர்ந்த நெறி' நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.