அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உணவு இன்மையின் வாடி, இளைத்து, வலிமைக் குன்றிப் படுத்துக் கிடக்கும் உயிர் உள்ள புலியின் தலையை நாய் அருகு சென்று மோந்து பார்த்துவிட முடியாது.

News image
Updated On :30 அக்டோபர் 2022, 11:11 am


நாடு அறியப்பட்ட பெருஞ் செல்வர், நல்கூர்ந்து
வாடிய காலத்தும், வட்குபவோ? - வாடி,
வலித்து, திரங்கி, கிடந்தே விடினும்,
புலித் தலை நாய் மோத்தல் இல்.     (பாடல்: 278)

உணவு இன்மையின் வாடி, இளைத்து, வலிமைக் குன்றிப் படுத்துக் கிடக்கும் உயிர் உள்ள புலியின் தலையை நாய் அருகு சென்று மோந்து பார்த்துவிட முடியாது. நாட்டு மக்களால் நன்கு அறியப்பட்ட பெரிய செல்வந்தர் நொடித்து வறுமைப் பட்டுவிட்டார் என்பதற்காகத் தாழ்ந்து போய்விட மாட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.